Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைஃபை வேண்டாம் கழிப்பறை போதும்; அரசு பள்ளிகளின் கோரிக்கை

வைஃபை வேண்டாம் கழிப்பறை போதும்; அரசு பள்ளிகளின் கோரிக்கை
, வியாழன், 6 ஜூலை 2017 (14:49 IST)
அரசு பள்ளிகளில் வைஃபை வசதி வேண்டாம் கழிப்பறை வசதி போதும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

 
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம் என்றும் தெரிவித்தார்.
 
அரசு பள்ளிகளில் வைஃபை வசதி ஏற்படுத்தி தருவதாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது;-
 
தொழில்நுட்ப வசதிகள் மட்டுமே பள்ளிகளின் தரத்தை உயர்த்தாது. பள்ளிகளில் முதலில் அடிப்படை வசதிதான் முக்கியம். அனைத்து அரசு பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமானது. இதுதான் பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம்: சீனா ஆணவம்!!