தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு வருகிற 28ஆம் தேதியன்று இம்மாத சம்பளத்தை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு வங்கிகள் அனைத்தும் ஊழியர்களுக்கு 27 அல்லது 28 ஆகிய தேதிகளில் சம்பளம் முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு இம்மாத சம்பளத்தை 28ஆம் தேதி வழங்க உத்தரவிட்டுள்ளது.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;
தீபாவளி இந்த மாதம் 29 ஆம் தேதி வருவதால், இம்மாத சம்பவளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என கோரிக்கை வந்தது. அதை ஏற்று வருகிற 28 ஆம் தேதி சம்பளத்தை வழங்க சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.