Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு வெடிக்க இந்த டைமெல்லாம் பத்தாது: தமிழக அரசு மேல்முறையீடு!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (12:39 IST)
தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்தான உச்சநீதிமன்ற தீர்ப்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
 
சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. காலம் காலமாக தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பட்டாசு வெடிப்பது தான் மரபு, ஆனால் உச்சநீதிமன்றம் மாலையில் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும் என அளித்திருக்கும் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆகவே தீபாவளியன்று காலையிலும் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சினிமாவில் நூறு பேரை அடிக்கும் விஜய், நேரில் அடிக்க முடியுமா? செல்லூர் ராஜூ கேள்வி

புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்..! ஒரே ஒரு வேண்டுகோள்.. ஏற்குமா ரஷ்யா?

ஜெலென்ஸ்கி விரும்பினால் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர முடியும்: டிரம்ப்

தமிழ்நாட்டு தர வேண்டிய நிதியை நிறுத்திய மத்திய அரசு: TNPSC தேர்வில் இப்படி ஒரு கேள்வி..!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments