Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா இருந்தால் பிரச்சாரத்திற்கு தடை! – உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள்!

கொரோனா இருந்தால் பிரச்சாரத்திற்கு தடை! – உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள்!
, வியாழன், 27 ஜனவரி 2022 (13:13 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், தேர்தலில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொரோனா அறிகுறிகள், பாதிப்பு தெரிய வந்தால் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. மேலும் மதுரை, திருச்சி, சென்னை போன்ற மாநகராட்சிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1400 வாக்காளர்கள் என்ற வீதத்தில் வாக்குச்சாவடிகளை அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்விட்டர் மத்திய அரசுடன் சேர்ந்து என்னை முடக்குகிறது! – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!