Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிப்பெண்ணை உயர்த்த தேர்வு என்பது உண்மை இல்லை – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (10:43 IST)
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில் அவர்களது மதிப்பெண்ணை உயர்த்த தேர்வு நடத்தப்படுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது. இந்நிலையில் 11ம் வகுப்பில் சேர மதிப்பெண் விகிதம் அவசியம் என்பதால் மதிப்பெண்ணை உயர்த்தி கொள்ள விரும்பும் மாணவர்களுக்காக மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆல்பாஸ் அறிவித்த பிறகு ஒரு தேர்வு என்பது பெற்றோர், மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வி துறை இவ்வாறாக கூடுதல் தேர்வு நடத்துவதாக வெளியான அறிவிப்பில் உண்மை இல்லை என்றும், அரசு அறிவித்த ஆல் பாஸ் மட்டுமே செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments