அந்த அம்மாவுக்கு கண்ணு தெரியல.. எப்படியாவது காப்பாத்த நினைச்சேன்! – நிகழ்வை விவரித்த மயூர்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (10:29 IST)
மும்பையில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே பணியாளர் அந்த சில வினாடிகள் குறித்து விவரித்துள்ளார்.

மும்பை சராகத்திற்குட்பட்ட வங்கனி ரயில் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் பார்வையற்ற பெண்ணுடன் சென்ற குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்த நிலையில் ரயில்வே பணியாளர் மயூர் ஷெல்கே பாய்ந்து சென்று நொடி பொழுதில் குழந்தையை காப்பாற்றினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் அவருக்கு ரூ.50 ஆயிரம் பணத்தை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து பேசிய மயூர் ஷெல்கே “பார்வையற்ற தாயுடன் சென்ற குழந்தை தண்டவாளத்தில் விழுவதை பார்த்தேன். நான் அவர்களிடமிருந்து 60 மீட்டர் தொலைவில் இருந்தேன். அந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட நினைத்தேன். ஒருவரை காப்பாற்றினேன் என்பதை சில வினாடிகளுக்கு என்னால் உணர முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசியல் எதிரி இல்லையா? பாஜகவை மட்டும் விமர்சனம் செய்த விஜய்..!

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments