Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிப்பெண் வழங்குவதில் குழப்பம்; கிரேடு முறை வழங்கலாமா? – ஆலோசனையில் கல்வித்துறை!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (11:36 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக கிரேடு முறையை அமல்படுத்த ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு முந்தைய தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவின்  அடிப்படையில் மதிப்பெண் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பல பள்ளிகளிடம் விடைத்தாள்கள் இல்லாதது, முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் சரிவர தேர்வுகளை எழுதாதது உள்ளிட்ட பிரச்சினைகளால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மதிப்பெண்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கிரேடிங் முறையை அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

முந்தைய மதிப்பெண்கள், வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கினால் எண் மதிப்பெண் அளிக்கும் சிக்கல் ஏற்படாது என்று கல்வியல் ஆர்வலர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகே முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments