Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான 8வது நபர்: பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (07:44 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் நாள்தோறும் சராசரியாக 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தினமும் ஓரிரு உயிர்ப்பலிகளும் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா பாசிட்டிவ் 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் என்றும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது என்றும் தெரிவித்தார்
 
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்த ஒரு சில மணி நேரங்களில் வேலூரில் கொரோனாவால் ஒருவர் பலியாகியுள்ளார். வேலூரைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 50க்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், ஓரிருவர் உயிரிழந்தும் வருவது தமிழக மக்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments