Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அலங்காநல்லூர் செல்லவில்லை, சென்னை திரும்பும் ஓபிஎஸ்?

அலங்காநல்லூர் செல்லவில்லை, சென்னை திரும்பும் ஓபிஎஸ்?
, ஞாயிறு, 22 ஜனவரி 2017 (10:04 IST)
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இன்று நடைப்பெற வாய்ப்பில்லாத காரணத்தினால் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து சென்னை திரும்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை அலங்காநல்லூரில் ஜல்லிக்காடு நடைப்பெறும் என தமிழக அரசு சார்பில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இன்று நடைப்பெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க நேற்று இரவே மதுரைக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றுவிட்டார்.
 
இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் வேண்டாம் என்றும், நிரந்தர சட்டம் வேண்டும் என்றும் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் வாடிவாசலில் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
தற்போது ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும், ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்க வாய்ப்பில்லாத காரணத்தினால் அவர் மதுரையில் இருந்து சென்னைக்கு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காளைகளை திருப்பி அனுப்பிய மக்கள்