Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை

சசிகலாவுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை
, வியாழன், 8 டிசம்பர் 2016 (14:40 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று போயஸ் கார்டனில் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில அவருடன் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அதிமுகவின் செயலாளர் யார் என்றும், அவரது சொத்து யாருக்கு என்றும் கேள்விகள் அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்களிடமும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு சில வட்டாரங்கள், ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தையும் தனியார் நபர் ஒருவர் கைப்பற்ற போவதாக தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் போயஸ் கார்டன் வீட்டை நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளார். ஒருபுறம் கட்சியில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சசிகலா முடிவு செய்து கொண்டிருக்கிறார். 
 
அதோடு இன்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில அவருடன் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு சேவை வரியில்லை!!