Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை செயலகத்தில் சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (16:28 IST)
காவிரி விவகாரத்தில் தலைமைச் செயலகத்தில் சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் எடப்படி பழனிச்சாமி அலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட 6 வார கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு மத்திய மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
 
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3மாத கால அவகாசம் தேவை என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வரும் 9 ஆம் தேது இந்த இரு வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 
 
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வலுவான வாதங்களை எடுத்து வைக்க ஆலோசனை நடந்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணைமுதல்வர், அமைச்சர்கள் சி.வி சண்முகம், ஜெயகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 
 
மேலும், தமிழக செயலாளர் கிரிஜா, வழக்கறிஞர் சேகர்நாப்தே, தலைமை வழக்கறிஞர் கிஜய் நாராயணன் ஆகியோரும், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமனியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments