காவிரி விவகாரம்: சேப்பாக்கம் மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (16:01 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என வேல்முருகன், தமிமுன் அன்சாரி, திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 
 
இந்நிலையில், வரும் 10-ம் தேதி  சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது. இதனால் மைதானத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments