Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த முதல்வர்!

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (13:55 IST)
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

 
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து கடந்த மாதம் 22ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் காவிரி விவகராம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
அதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின், அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று சேர்ந்து பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் நாளை நேரில் சந்தித்த அழைப்பு விடுத்துள்ளார். இவர்களின் சந்திப்பு தலைமை செயலகத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments