Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்-தினகரன் பரபரப்புக்கு இடையே டெல்லி செல்லும் ஈபிஎஸ்

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (20:01 IST)
ஓபிஎஸை தினகரன் சந்தித்ததாகவும், தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாகவும் இரண்டு மாறுபட்ட செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. மொத்தத்தில் இருவருமே முதல்வர் ஈபிஎஸ் ஆட்சிக்கு வேட்டு வைக்க முயற்சி செய்துள்ளார்கள் என்பது மட்டும் உண்மை என புரிகிறது.

இந்த நிலையில் ஓபிஎஸ், தினகரன் பரபரப்புக்கு இடையே நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். வரும் 8ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கும் அவர் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், வரும் பாராளுமன்ற தேர்தலை அதிமுக, பாஜக இணைந்து சந்திப்பது குறித்தும், 7 பேர் விடுதலை குறித்தும் ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியல் தற்போது பரபரப்பான சூழலில் இருக்கும் நிலையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments