சுஜித் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (18:37 IST)
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் இன்று காலை பிணமாகத்தான் மீட்கப்பட்டார். மறைந்த அந்த குழந்தைக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் சுஜித்தின் கல்லறைக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதுமட்டுமன்றி அவர் சுஜித்தின் குடும்பத்தினர்களுக்கு ரூபாய் 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் செய்தார். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடுக்காட்டுப்பட்டி சென்று சுஜித் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, சுகத்தின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து சுஜித் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் ரூபாயும், அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும் என மொத்தம் 20 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தார் 
 
சுஜித் இழப்பிற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு இணை இல்லை என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இந்தத் தொகை சுஜித் குடும்பத்தினர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இந்த நிதி உதவியை அரசியல் என கருதாமல் சுஜித் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஒரு சிறிய உதவி என்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments