Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஜித் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (18:37 IST)
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் இன்று காலை பிணமாகத்தான் மீட்கப்பட்டார். மறைந்த அந்த குழந்தைக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் சுஜித்தின் கல்லறைக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதுமட்டுமன்றி அவர் சுஜித்தின் குடும்பத்தினர்களுக்கு ரூபாய் 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் செய்தார். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடுக்காட்டுப்பட்டி சென்று சுஜித் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, சுகத்தின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து சுஜித் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் ரூபாயும், அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும் என மொத்தம் 20 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தார் 
 
சுஜித் இழப்பிற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு இணை இல்லை என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இந்தத் தொகை சுஜித் குடும்பத்தினர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இந்த நிதி உதவியை அரசியல் என கருதாமல் சுஜித் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஒரு சிறிய உதவி என்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments