Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரவி வரும் புதிய கொரோனா: மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (11:10 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கடந்த ஒரு ஆண்டாக உலகம் முழுவதும் மனித இனமே ஆபத்தில் இருந்த நிலையில் தற்போது பிரிட்டனில் இருந்து புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது 
 
குறிப்பாக தமிழகம் உள்பட இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சற்று முன்னர் தலைமைச் செயலகத்தில் காணொளி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறார் 
 
இந்த ஆலோசனையில் தமிழகத்தில் புதிய வகை கொரோனா நோயை தடுப்பது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் இதனை அடுத்து மருத்துவ நிபுணர்களிடம் அவர் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு உத்தரவை நீடிப்பது குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!

விண்ணப்பம் வாங்கவே வராத மாணவர்கள்.. தேதியை நீட்டித்த பாலிடெக்னிக் நிர்வாகம்..!

பிராட்வேயில் இனி பேருந்து நிலையம் கிடையாது.. எங்கே மாற்றப்பட்டது தெரியுமா?

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments