Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வர் நிதியில் சேர்ந்த பணம் எவ்வளவு? – முதல்வர் அறிக்கை

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (10:45 IST)
கொரோனா நிவாரண பணிகளுக்காக பொதுமக்களிடம் தமிழக முதல்வர் நிதி அளிக்க கோரிக்கை விடுத்த நிலையில் இதுவரை பெறப்பட்டுள்ள நிதி தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு மக்களிடம் நிதி அளிக்க சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல் நீங்கள் அளிக்கும் சிறிய தொகையும் ஏழை எளிய மக்களுக்கு உதவும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் முதல்வர் நிவாரண நிதி கணக்கில் பெறப்பட்ட நிதி குறித்து அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 2 வரை மொத்தமாக 62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 3ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலான நான்கு நாட்களில் 17 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 886 ரூபாய் பெறப்பட்டுள்ளது.

இதனால் முதல்வர் கணக்கில் சேர்ந்த மொத்த நிதி 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆக உள்ளது என செய்தி தொடர்பு துறை செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments