காவிரி மேலாண்மை விவகாரம் எதிரொலி: டிவி விவாதங்களில் இருந்து தப்பித்து ஓடும் பாஜகவினர்

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (16:39 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு இந்த வாரியத்தை அமைக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் அடுத்து என்ன செய்வார்கள் என்று தமிழக மக்களும், விவசாயிகளும் கவலையுடன் நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அனைத்து செய்தி சேனல்களிலும் இதுகுறித்து காரசாரமாக விவாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வழக்கமாக டிவியில் விவாதம் செய்யும் பாஜகவினர் இன்று எந்த டிவிக்கும் விவாதம் செய்ய வருவதற்கு மறுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருசிலர் விவாதத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகவும், ஒருசிலர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

எனவே இன்று தொலைக்காட்சிகளில் பாஜகவினர் தரப்பில் இருந்து யாரும் இல்லாமலேயே விவாதம் நடைபெறும் என தெரிகிறது. ஆனாலும் விவாதம் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் உருவாக்க தொலைக்காட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments