கோரொனா பீதி: சட்டப்பேரவையை முன்கூட்டியே முடிக்க முடிவு!!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (13:11 IST)
கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  
 
இதன் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மார்ச் 31 ஆம் தேதி வரை கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தமிழக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே முடிப்பது குறித்து நேற்று ஆலோசிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்படுகிறது. 
 
எப்ரல் 9 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்ட நிலையில் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. காலை, மாலை என இரண்டு கூட்டங்கள் நடத்தி முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments