Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரிடர் முன்னறிவிப்புகளை அறிய புதிய செயலி.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (16:40 IST)
பேரிடர் அறிவிப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு புதிய செயலி உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் நிலநடுக்கம் உள்பட பேரிடர்களை அறிந்து கொள்வதற்காக செயலி உருவாக்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தின் போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
TN-Alert என்ற செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART என்ற செயலி ஆகியவைகளுக்காக ரூபாய் 12.50 கோடி செலவு செய்யப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
தமிழகத்தில் சமீப காலங்களாக நிலநடுக்கம் உணர்ந்து வருவதை அடுத்து தேசிய நில அதிர்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த செயலி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
அதேபோல் நில அளவை, நில ஆவணங்கள் தொடர்பாக இ சேவைகள் தொடர்பான தகவல்களை பெறுவதற்காகவும் புதிய செயலி உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments