Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
வியாழன், 24 அக்டோபர் 2024 (16:39 IST)
தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று இரவு கன மழைக்கான வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்க கடலில் உருவாகியுள்ள டானா புயல், ஒரு பக்கம் கரையை கடக்க நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருநெல்வேலி, நீலகிரி, மயிலாடுதுறை, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 19 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்பதால், பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றங்கள்: முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் நாளை எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.. விடுமுறை அளிக்கப்படுமா?

தீபாவளிக்கு நாடு முழுவதும் 7000 சிறப்பு ரயில்கள்.. மத்திய அமைச்சர் தகவல்..!

AI பெண்ணுடன் காதல் கொண்ட 14 வயது சிறுவன் தற்கொலை! - அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்!

ஏர்டெல் ரூ.239 ரீசார்ஜ் செய்தால் ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு!? - ஏர்டெல் அசத்தல் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments