Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பள்ளியில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து.. மாணவர்களை காப்பாற்றிய ஊர்மக்கள்..!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (15:17 IST)
திருவாரூர் அருகே அரசு பள்ளியில் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த பள்ளியில் உள்ள மாணவர்களை ஊர் மக்கள் காப்பாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
திருவாரூர் அருகே நன்னிலம் என்ற பகுதி அருகே அரசு பள்ளி ஒன்று கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று காலை நன்னிலம் அரசு பள்ளியில் திடீர் என சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
உடனடியாக அந்த பகுதியில் உள்ள ஊர் மக்கள் தீ விபத்தையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குள் சென்று அங்கிருந்து மாணவ மாணவிகளை காப்பாற்றினர். இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

’கிங்டம்’ திரையிட்ட தியேட்டர்களை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்.. என்ன காரணம்?

பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய சாப்ட்வேர் எஞ்சினியர்.. புனேவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

உக்ரைன் அதிபர் மனைவி பயணம் செய்த விமானம் திடீரென இந்தியாவில் தரையிறக்கம்.. என்ன காரணம்?

திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு.. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகளை காணவில்லை. 4 பேர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments