Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு: எந்த மாவட்டத்தில்?

நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு: எந்த மாவட்டத்தில்?
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:25 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இன்று மட்டும் 27 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதும் இந்த விடுமுறை அறிவிப்பு மேலும் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
அதன்படி முதல் கட்டமாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார். இதேபோல் மற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களும் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு... இதோ புதிய அறிவிப்புகள்!!