திருவாரூர் தேர்தல்: திமுக நெருக்கடியா?

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (22:21 IST)
திமுகவுக்கு நெருக்கடி  தரவேண்டும் என்பதற்காகவே திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதி என்பதால் திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மீது தொண்டர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் திமுக உள்ளது.

அதேபோல் திமுக தலைமையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைய வேண்டுமானால் திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியும் உள்ளது.

ஆனால் அதிமுகவுக்கும், அமமுகவிற்கும் இந்த நெருக்கடி இல்லை. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடிப்பது யார்? என்பதை நிரூபித்தால் போதுமானது. இந்த மூன்று கட்சிகளை தவிர வேறு கட்சிகள் திருவாரூர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments