Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் இடைத்தேர்தல்: அதிமுக முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (21:26 IST)
இன்று மாலை திருவாரூரில் இடைத்தேர்தல் வரும் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்தே அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகிவிட்டது. குறிப்பாக ஆளும் அதிமுகவும், கருணாநிதி ஜெயித்த தொகுதியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற தீவிரத்தில் உள்ள திமுகவும் தேர்தல் பணியை இன்றே தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் திருவாரூரில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவோருக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தலைமைக்கழகம் அறிவித்த்துள்ளது.

மேலும் ஜனவரி 4ஆம் தேதியன்று விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் தலைமை கழகத்தில் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments