திருவண்ணாமலையில் தொடங்கிய தேரோட்டம்! – ஊர் முழுவதும் விழாக்கோலம்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (08:34 IST)
திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தேரோட்டம் நடப்பதால் தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7வது நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகள் கொரோனா காரணமாக இந்த தேரோட்டம் நடைபெறாததால் தற்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

காலையில் விநாயகர் தேர், முருகன் தேர் வீதி உலா முடிந்ததும், பெரிய தேர் புறப்படும். இந்த தேரை ஆண்களும், பெண்களுக்கு இருபுறமும் அணிவகுத்து வடம் பிடித்து இழுப்பர். இரவு நடைபெறும் அம்மன் தேர் வீதி உலாவில் பெண்கள் மட்டுமே தேரை இழுப்பர். அதை தொடர்ந்து வரும் சண்டிகேஸ்வரர் தேர் சிறுவர், சிறுமியரால் இழுத்து வீதி உலா நடைபெறும்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments