Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் தொடங்கிய தேரோட்டம்! – ஊர் முழுவதும் விழாக்கோலம்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (08:34 IST)
திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தேரோட்டம் நடப்பதால் தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7வது நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகள் கொரோனா காரணமாக இந்த தேரோட்டம் நடைபெறாததால் தற்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

காலையில் விநாயகர் தேர், முருகன் தேர் வீதி உலா முடிந்ததும், பெரிய தேர் புறப்படும். இந்த தேரை ஆண்களும், பெண்களுக்கு இருபுறமும் அணிவகுத்து வடம் பிடித்து இழுப்பர். இரவு நடைபெறும் அம்மன் தேர் வீதி உலாவில் பெண்கள் மட்டுமே தேரை இழுப்பர். அதை தொடர்ந்து வரும் சண்டிகேஸ்வரர் தேர் சிறுவர், சிறுமியரால் இழுத்து வீதி உலா நடைபெறும்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments