Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னஞ்சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து வன்கொடுமை! – பள்ளி ஆசிரியர் கைது!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (09:43 IST)
திருவண்ணாமலையில் 4 வயது சிறுமிக்கு பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் போளூர் அருகே சேத்பட் பகுதியை சேர்ந்த தம்பதியர் தங்களது 4 வயது மகளை அருகே உள்ள ஸ்ரீசாந்தா மெட்ரிக் பள்ளியில் யூகேஜி சேர்த்துள்ளனர். பள்ளி சென்று வந்த சிறுமி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

இதனால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிறுமியை யாரோ பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியிருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில் பள்ளி தலைமை ஆசிரியரின் கணவர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து வன்கொடுமை செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். கைதுக்கு பயந்து பள்ளி தலைமை ஆசிரியரின் கணவரும், அரசு பள்ளி ஆசிரியருமான காமராஜ் தலைமறைவான நிலையில் அவரை போலீஸார் தேடி பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்