Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை தீபத் திருவிழா: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Prasanth Karthick
புதன், 11 டிசம்பர் 2024 (17:51 IST)

திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத்திருவிழாவிற்கு செல்ல பக்தர்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து 3 நார்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

வரும் வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை தீபத்தை காண செல்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் சென்னை, தாம்பரம் மக்கள் சென்று வர தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று தினங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் சிறப்பு ரயில் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக மதியம் 2.45க்கு திருவண்ணாமலை சென்றடையும்

 

மறுமார்க்கமாக இரவு 10.25க்கு திருவண்ணாமலையில் புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 2.15 மணியளவில் தாம்பரம் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments