Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திகை தீபத் திருவிழா! திருவண்ணாமலையில் கொடியேற்றம்!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (09:20 IST)
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 27ம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தீபத் திருவிழாவை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தீபத் திருவிழா எளிய முறையில் கோவிலுக்கு உள்ளேயே நடத்தப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நவம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சிகர நிகழ்வாக டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை மகாதீப தரிசனமும் நடைபெற உள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments