Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திகை தீபத் திருவிழா! திருவண்ணாமலையில் கொடியேற்றம்!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (09:20 IST)
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 27ம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தீபத் திருவிழாவை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தீபத் திருவிழா எளிய முறையில் கோவிலுக்கு உள்ளேயே நடத்தப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நவம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சிகர நிகழ்வாக டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை மகாதீப தரிசனமும் நடைபெற உள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments