Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடித்த அரியானா கும்பல்? – போலீஸார் தீவிர விசாரணை!

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (15:50 IST)
திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம்களில் கைவரிசை காட்டிய மர்ம கும்பலை போலீஸார் வலைவிரித்து தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள போளூர், பணிமனை, மாரியம்மன் கோவில் தெரு, கலசப்பாக்கம் ஆகிய நான்கு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் ஒரே நாள் இரவில் மொத்தமாக ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு ஏடிஎம்களிலும் ஒரே கும்பல் கொள்ளையடித்திருப்பதாக சந்தேகப்படும் நிலையில் போலீஸார் தனிப்படைகள் அமைத்து கொள்ளைக்கூட்டத்தை தேட தொடங்கியுள்ளனர். ஏடிஎம் கொள்ளை நடந்த பகுதிகள் மற்றும் மாவட்ட எல்லையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் வீடியோக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கியுள்ளார்களா என்பதையும் தனியார் விடுதிகள் உள்ளிட்டவற்றில் சோதனையிட போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு

இதுதவிர அரியானா மாநிலத்தை சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என கருதப்படுவதால் அரியானா கும்பலை போலீஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments