Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குளத்தில் மூழ்கிய சிறுமி, காப்பாற்ற முயன்று 5 பேர் பலி! – திருவள்ளூரில் சோகம்!

Advertiesment
Tamilnadu
, புதன், 14 ஜூலை 2021 (12:21 IST)
திருவள்ளூரில் குளத்தில் மூழ்கிய சிறுமியை காப்பாற்ற முயன்று ஒரே சமயத்தில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் புதுக்கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் அப்பகுதி மக்கள் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் அக்குளத்தில் வழக்கம்போல சிலர் குளித்துக் கொண்டிருந்தபோது சிறுமி ஒருவர் மூழ்கியதாக தெரிகிறது.

அந்த சிறுமியை காப்பாற்ற மேலும் சில சிறுமிகள் முயன்று அவர்களும் நீரில் மூழ்க அவர்களை காப்பாற்ற முயன்ற 38 வயது பெண்மணியும் நீரில் மூழ்கினார். இந்த விபத்து சம்பவத்தில் மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொங்கு நாட்டு சிங்கமே.. நாளைய முதல்வரே! – பாஜக அண்ணாமலைக்கு போஸ்டர்!