Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் கொள்ளை முயற்சி; உடைக்க முடியாததால் தூக்கி சென்ற கொள்ளையர்கள்!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (10:02 IST)
திருப்பூரில் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள் உடைக்க முடியாததால் மெஷினை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டுவருகிறது. ஆள் இல்லா நேரத்தில் ஏடிஎம்மிற்குள் புகுந்த முகமூடி அணிந்த கும்பல் ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் ஏடிஎம் இயந்திரம் உடைக்க கடினமாக இருந்துள்ளது. இதனால் கொள்ளையை கைவிட விரும்பாத அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தையே பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏடிஎம் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments