Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத பூஜை தினத்தில் சாமி சிலை, புகைப்படம் வைக்க கூடாது என அறிக்கையா? மருத்துவக் கல்லூரி விளக்கம்.

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (10:27 IST)
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு மதம் சார்ந்த சாமி புகைப்படமோ சிலையோ வைக்க கூடாது என அந்த கல்லூரியின் டீன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில்  இவ்வாறு வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மருத்துவமனை நிர்வாகம்அறிக்கை வெளியிட்டுள்ளது.  திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் எந்த விதமான சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும் தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது என்றும் இது உண்மைக்கு புறம்பானது என்றும் மருத்துவமனை டீன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 
இந்த அறிக்கை உண்மை என நம்பி பாஜகவை சேர்ந்த சிலர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments