Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை இல்லைன்னா மதிக்க மாட்டாங்க..! திருப்பூர் குழந்தை கடத்தலில் திடீர் திருப்பம்!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (11:44 IST)
திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சத்யா என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 7 நாட்கள் ஆகியிருந்த நிலையில் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை திடீரென காணாமல் போனது. இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் ஒரு பெண் குழந்தையை கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தொடர் விசாரணையை மேற்கொண்ட போலீஸார் குழந்தையை கடத்திய பாண்டியம்மாள் என்ற பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

குழந்தையை கடத்தியது குறித்து வாக்குமூலம் அளித்த பாண்டியம்மாள் தனக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்ததாகவும், அதனால் கர்ப்பமானது போல் நடித்து வந்த பாண்டியம்மாள் பிரசவத்திற்கு மருத்துவமனை செல்வது போல நாடகமாடி மருத்துவமனைக்கு வந்து குழந்தையை திருடி சென்றதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments