Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்சில் துப்பினால் ரூ.100, மறுபடி துப்பினால் ரூ.500! – திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (15:10 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் முடங்கியுள்ள நிலையில் திருப்பூர் ஆட்சியரின் புதிய உத்தரவு திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் கொரோனா விழிப்புணர்வுடன் செயல்படுவது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றுதல், மாஸ்க் அணிதல், கண்ட இடங்களில் எச்சில் துப்பாமல் இருந்தல் போன்றவற்றை அதிகாரிகள் மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது மாஸ் அணியாமல் சென்றால் அபராதம் என்ற நடைமுறை அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்தே தங்கள் அன்றாட வேலைகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் எச்சில் மூலமும் கொரோனா வேகமாக பரவும் என்பதால் திருப்பூர் ஆட்சியர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் நடமாடுதல், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல் போன்றவற்றை செய்தால் முதல் தடவைக்கு ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படும். மீண்டும் செய்தால் ரூ.500 அபராதமும், அதற்கு பிறகும் தொடர்ந்து செய்தால் காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments