Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய் செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! – திருப்பத்தூர் போலீஸ் எச்சரிக்கை!

Webdunia
சனி, 2 மே 2020 (11:29 IST)
திருப்பத்தூரில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த போலீஸார் அனுமதித்ததாக வெளியான பொய் செய்திக்காக நடவடிக்கை எடுத்துள்ள போலீஸார் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற தொடர்ந்து காவல் பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூரில் இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடத்துவதாகவும்., அதற்கு போலீஸார் உதவுவதாகவும் பொய் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் போலீஸார் உடனடியாக போலி செய்தியை ஆராய்ந்ததில் அதில் உள்ள புகைப்படம் அலகாபாத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் விளக்கம் அளித்துள்ள திருப்பத்தூர் போலீஸார், போலி தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments