Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மணிநேரத்தில் மூதாட்டிக்கு உதவித்தொகை – நம்பமுடியாத வேகத்தில் அரசு அதிகாரிகள் !

Webdunia
புதன், 1 ஜனவரி 2020 (18:28 IST)
திருப்பத்தூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்த மூதாட்டிக்கு உதவிப்பணம் கிடைக்க அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் அப்பாண்டகுப்பம் என்ற பகுதியில் வசித்து வருபவர் அம்சா என்ற 70 வயது மூதாட்டி. வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலை மோசமாக இருந்துவந்துள்ளது. உதவிக்கு ஆட்கள் இல்லாமல் கஷ்டப்படும் அவரது நிலைமையை மோகன் என்பவர் விடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பரப்பினார்.

இதைப்பார்த்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவருக்கு உதவித்தொகை கிடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஒரு மணிநேரத்தில் அவருக்கு முதியோர் உதவித் தொகை சான்றிதழ் அளித்தனர். இதை அடுத்து வட்டாட்சியர் மகாலெட்சுமி முதல் மாத தவணையை அவரிடம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments