திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராக அரசின் மேல்முறையீட்டு மனு, இரு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த இரு நீதிபதிகள் அமர்வு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது. மேலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பதாகவும் அமர்வு தெரிவித்தது.
முன்னதாக, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள், மனுதாரருக்கு ஆதரவாக சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்போடு சென்று மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். ஆனால், தமிழ்நாடு காவல்துறை இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்ததுடன், மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.