Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (19:09 IST)
திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்(06030) இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை இயக்கப்படும். இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். 
 
மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி(06029) இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற செப்டம்பர் 2-ந்தேதி முதல் ஜனவரி 27-ந்தேதி வரை இயக்கப்படும். இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வெலி சென்றடையும். 
 
திருநெல்வேலி-தாம்பரம்(06004) இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலி-விருதுநகர் இடையே செல்லும் நேரம் வருகிற ஆகஸ்டு 28-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் நேரம் 7.20 மணிக்கு மாற்றம்செய்யப்படுகிறது. இதேபோல் விருதுநகர் வரை ரெயில் செல்லும் நேரங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments