Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் தேடி பிடித்து ஓட்டு போட்டிருக்கிறார்கள்! – திருமாவளவன் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (10:28 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 93 இடங்களில் வி.சி.க வென்றுள்ளது குறித்து திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. நேற்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்னை மர சின்னத்தில் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகளில் மாநகராட்சியில் 16 வார்டுகள், நகராட்சியில் 26 வார்டுகள், பேரூராட்சிகளில் 51 வார்டுகள் என மொத்தம் 93 இடங்களில் விசிக வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் “கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு சின்னத்திலும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தென்னை மர சின்னத்திலும் என சின்னம் மாறினாலும் கூட மக்கள் தேடி வந்து வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments