Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நேர செல்பியால் ஆத்திரமானதா திருச்செந்தூர் யானை.? 2 பேர் பலியான சம்பவத்தில் விசாரணை..!

Siva
செவ்வாய், 19 நவம்பர் 2024 (08:03 IST)
திருச்செந்தூர் கோவில் யானை தாக்கிய இரண்டு பேர் பலியான சம்பவத்தில் முதல் கட்ட விசாரணையில் யானை அருகே நீண்ட நேரம் செல்பி எடுத்ததால்தான் அந்த யானை ஆத்திரமடைந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை நேற்று திடீரென கோபமடைந்து யானைப்பாகன் மற்றும் யானைப்பாகனின் உறவினர் ஆகிய இருவரையும் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் யானை உடன் பாகனின் உறவினர் சிசுபாலன் என்பவர் நீண்ட நேரம் செல்பி எடுத்து விட்டு யானையை தொட்டதாக தெரிகிறது. புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாங்கியுள்ளது.

உடனே அவரை காப்பாற்ற யானைப்பாகன் வந்தபோது, யானை பாகனை தெரியாமல் தாக்கிவிட்டது என்பதை உணர்ந்து அவரை எழுப்ப முயன்றது. ஆனால் அவர் எழுந்திருக்காததால், மீண்டும் ஆதிக்கத்தில் சிசுபாலனை தாக்கியதாக திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கவின் தெரிவித்துள்ளார்.

80 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை என்றும், செல்ல பிள்ளை விளையாட்டு பிள்ளையாகத்தான் தெய்வானை யானை இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments