Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகளுக்கு பிறகு ஆவணி திருவிழா! – திருச்செந்தூர் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:17 IST)
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நடைபெறும் நிலையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணியில் நடைபெறும் ஆவணி திருவிழா விசேசமானதாகும், 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தரிசனத்திற்காக வருகை தருவர்.

இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று மாலை 5.40 மணியளவில் ஆவணி திருவிழா கொடி கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது.

அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்கின்றனர். ஆவணி 10ம் தேதி (ஆகஸ்டு 26) அன்று விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை புரிவர் என்பதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

சகோதரனுக்கு சகோதரியுடன் திருமணம்! இரட்டை குழந்தை பிறந்தால் இப்படி ஒரு வழக்கமா? - வைரலாகும் வீடியோ!

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments