Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேருக்கு நேர் மோதிக் கொண்ட ரயில்கள்! – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:05 IST)
மகாராஷ்டிராவின் கொண்டியா பகுதியில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்குநேர் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில் அதிகாலை 2.30 மணியளவில் மும்பை அருகே கொண்டியா பகுதியில் வந்துக் கொண்டிருந்துள்ளது.

அப்போது அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்றும் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக எதிரே ரயில் வந்ததால் வேகத்தை கட்டுப்படுத்துவதற்குள் மோதி இரண்டு ரயில்களும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதில் பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏதும் ஏற்படவில்லை. சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments