Publish Date: Fri, 21 Feb 2020 (08:14 IST)
Updated Date: Fri, 21 Feb 2020 (08:16 IST)
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி என்ற பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவர் அந்த ஊரையே கெடுக்கும் வகையில் ஆபாசமான டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்ததால் ஊரை விட்டு விரட்டப்பட்டார் என்பது தெரிந்ததே
சுகந்தி ஊரைவிட்டு விரட்டப்படுவதற்கு டிக்டாக்கில் உள்ள இரண்டு நபர்கள் தான் காரணம் என்பதும், ஆரம்பத்தில் சுகந்திக்கு நண்பர்களாக இருந்த இவர்கள் பின்னர் அவருக்கு எதிரிகளாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தன்னை ஊரை விட்டு விரட்ட காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களுக்கும் சுகந்திக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்ததாகவும், இதனை அடுத்து தனது புதிய ஆண் நண்பர்களுடன் இணைந்து கூலிப்படை மூலம் அவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் டிக்டாக்கில் வெளியான ஆடியோ உரையாடல் ஒன்றின்மூலம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது
இரண்டு இளைஞர்களை டிக்டாக்கில் திட்டம் போட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொழுதுபோக்கு என்பதையும் மீறி தற்போது ஆபாசம் மற்றும் குற்றச்செயல்களுக்கும் காரணமாக இருப்பதால் டிக்டாக் செயலியை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்