Publish Date: Wed, 24 Apr 2019 (18:39 IST)
Updated Date: Wed, 24 Apr 2019 (18:53 IST)
டிக் டாக் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், முத்துக்குமார் என்பவர் தாக்கல்செய்த மனுவில் டிக்டாக் மற்றும் மியூசிக்கலி போன்ற செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த டிக் டாக் தடை செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டிலும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
அதோடு, ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி எச்சரித்திருந்தனர். இதனை ஏற்று கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை நீக்கப்பட்டது.
இந்நிலையில் இது சம்மந்தமான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது டிக் டாக் மீதான தடையை நீக்குவதாகவும் சமூக சீர்கேடுகளை ஏற்படுத்துவது மாதிரியோ அல்லது ஆபாசமான வகையில் வீடியோ பதிவிட்டு வந்தாலோ நீதிமன்றம் தாமாக முன்வந்து டிக் டாக்கை தடை செய்யும் என்ற நிபந்தனையோடு டிக் டாக் மீதான தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.