Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி, மழை.... மஞ்சள் எச்சரிக்கை - வானிலை மையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி, மழை....  மஞ்சள் எச்சரிக்கை - வானிலை மையம்
, வெள்ளி, 24 மார்ச் 2023 (18:28 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ள போதிலும், சில நாட்களாக டெல்டா பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு திசைக்காற்றும் மேலடுக்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றூடன் மணிக்கு 30-40 மீட்டர் வேகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், தமிழகத்திலுள்ள, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை,  திருச்சி, மயிலாடுதுறை , திருவாரூர், நாகை ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தகுதிநீக்கம் எதிரொலி: மக்களவை வலைதளத்தில் ராகுல்காந்தி பெயர் நீக்கம்..!