Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் முக்கிய சாலையில் பட்டாகத்தியுடன் நின்ற இளைஞர்கள்: பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (23:10 IST)
சமீபத்தில் ரயில் நிலையம் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று சென்னை சத்யம் திரையரங்கம் அருகில் மூன்று இளைஞர்கள் பட்டாகத்தியுடன் நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து நெருக்கடியான பகுதியான ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கம் அருகே பட்டாக்கத்தியுடன் நின்றுக் கொண்டிருந்த அந்த மூன்று இளைஞர்களை மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் மணிகண்டன், ரமேஷ், மணி என்பதும் மூவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் மூவரும் உறவினர்கள் என்பதும் தங்களுடைய  குடும்பத் தகராறு காரணமாக மோதிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments