Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் உருண்ட வெட்டப்பட்ட மனித தலை; பீதியில் மக்கள்!

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (21:05 IST)
காஞ்சிப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியில் வெட்டப்பட்ட மனிதனின் தலை ஒன்று சாலையில் வீசப்பட்டதால் இதை கண்ட மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில், இந்த சம்பவம் இன்று காலையி நடைபெற்றது. அந்த பகுதி பேருந்து நிலையத்தின் வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் பிளாஸ்டிக் கவர் ஒன்றை சாலையில் வீசி சென்றுள்ளனர்.
 
அவர்கள் அந்த கவரை வீசி சென்ற வேகத்தில் அதில் இருந்து தலை ஒன்று உருண்டு வெளியே ஓடியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 
 
இதன் பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மனித தலையை அங்கிருந்து மீட்டனர். அது கோனாதி கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரது தலையாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரது உடல் எங்கே இருக்கிறது என போலீஸார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments