Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாஷேத்ரா விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் மூவர் டிஸ்மிஸ்

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (10:48 IST)
கலாஷேத்ரா விவகாரத்தில் நேற்று நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் மூன்று பேர் தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நான்கு பேராசிரியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 
 
இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நால்வரில் ஹரி பத்மன் என்பவர் மட்டும் சஸ்பெண்டில் இருப்பதாகவும் மற்ற மூவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
கலாஷேத்ரா பாலியல் புகாரில் சிக்கிய சஞ்சீத் லல், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய மூவரும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவிகளின் கோரிகையை கோரிக்கையை ஏற்று இது குறித்து எழுத்து பூர்வமான அறிவிப்பை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்