கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை.. 5 தனிப்படைகள் அமைப்பு..!

Mahendran
திங்கள், 15 ஜூலை 2024 (15:47 IST)
கடலூர் காராமணி குப்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
கடந்த சனிக்கிழமை அதிகாலை கொலை செய்துவிட்டு இன்று அதிகாலை உடலை தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
கடலூர் அருகே காராமணி குப்பம் என்ற  பகுதியை  சேர்ந்த 40 வயது சுதன்குமார் என்பவர் ஐதராபாத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில், இவரது வீட்டிற்குள் திடீரென மர்ம நபர்கள் புகுந்தனர்.
 
வீட்டில் இருந்த சுதன் குமார், அவரது தாயார் கமலேஸ்வரி மற்றும் சுதன்குமாரின் மகன் நிஷாந்தன் ஆகிய மூவரையும் மாறி மாறி  கொலை செய்து பிணத்தை ஒவ்வொரு அறையில் வைத்து அதன்பின் அறைகளுக்கு தீ வைத்துள்ளனர்.
 
இந்த கொலை  தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள்! சினிமாவில் இருந்துகொண்டே இப்படி சொல்றாரே

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற BLO.. சக பணியாளர்கள் போராட்டம்..!

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments